search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீலநாயக்கன்பட்டி"

    • சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவி ஊராட்சி சீலநாயக்கன்பட்டியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.முகாமிற்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், சார்பு நீதிபதியுமான மணிகண்டன், மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன் ஆகியோர் தலைமை தாங்கினார். முகாமில் சட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    இதில் குற்றவியல் நீதித்துறை நடுவர்கள் விஜயகுமார், மீனாட்சி, துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன், வழக்கறிஞர்கள் மகேஸ்வரன், காளீஸ்வரன், மாரிமுத்து, நாராயணசாமி, சத்தியவாணி, மகாலட்சுமி மற்றும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×