search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்"

    • விழா 3 நாட்கள் நடக்கிறது.
    • 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே நாகக்கோடு பகுதியில் குழிவிளை இசக்கியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா நேற்று தொடங்கியது. விழா 3 நாட்கள் நடக்கிறது.

    இந்த கோவிலுக்கு பக்கத்து ஊரில் உள்ள அம்பலத்துவிளை சக்தி பரமேஸ்வரி கோவிலில் இருந்து அம்மனுக்கு பக்தர்கள் சீர் கொண்டு வந்து விழாவை தொடங்கி வைத்தனர்.

    இந்த சீரில் பெண்கள் முன்னால் விளக்கு ஏந்தி வரிசையாக வர பின் 29 தட்டுகளில் சீர் பொருட்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக கொண்டு வந்தனர். குழிவிளை இசக்கியம்மன் கோவில் அம்மன் பக்தர்கள் சீருடை அணிந்து வந்த அவர்களை வரவேற்று சீரை பெற்றுக்கொண்டனர்.

    இது இப்பகுதியில் உள்ள கோவில்களில் முதல் முதலாக நடக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்வை பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். வரும் காலங்களில் இந்த நிகழ்வு அனைத்து அம்மன் கோவில்களிலும் நடக்கும் என்று பக்தர்கள் கூறினர். இதனால் ஊர் ஒன்றுமை ஓங்கும், மக்களிடம் பரஸ்பரம், விட்டுக்கொடுத்து செல்லுதல், அன்பு ஏற்படும். இதனால் சுபிட்சம் உண்டாகும் என அம்மன் பக்தர்கள் கூறினார்கள்.

    • துவாக்குடி அருகே வடக்குமலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர்கள் கல்வி சீர் வழங்கினர்
    • மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்

    திருவெறும்பூர்:

    திருச்சி மாவட்டம் துவாக்குடி வடக்கு மலை–யில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் ஆண்டு–தோறும் கல்வி சீர் வழங்கும் நிகழ்ச்சி நடை–பெறும். பள்ளிக்கும், மாண–வர்களுக்கும் கல்வி கற்க தேவையான பொருட்களை அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்க–ளும், தன்னார்வலர்களும் வழங்குவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் செயல்படாமல் இருந்ததால், கல்வி சீர் வழங்கும் நிகழ்வு நடைபெறவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு கல்வி சீர் எடுக்கும் விழாவானது நடைபெற்றது. விழாவை வட்டார கல்வி அலுவலர்கள் ரெஜி –பெஞ்சமின், ஜெஹ்ரா பர்வீன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்த–னர். இதில் பெற்றோர்கள் பள்ளி சீர்வரிசை பொருட்களை தலையில் சுமந்தபடி மேளதாளங்கள் முழுங்க ஆட்டம், பாட்டத்துடன் வீதி, வீதியாக ஊர்வலமாக வந்தனர். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் கல்வி குறித்த விழிப்புணர்வு பாடல்களை பாடினார். அப்போது பெற்றோர்கள், பள்ளி மேலாண்மை குழுவி–னர், எழுத்தறிவு திட்டத்தில் பயிற்சி பெறுப–வர்கள் தலைமை ஆசிரியரின் பாடலுக்கு கும்மி அடித்து ஆடினர். மேலும் பள்ளி மாணவன் சிலம்பாட்டம் ஆடி சீர்வ–ரிசை கொண்டு வந்த பெற்றோர்களை வரவேற்று உற்சாகப்படுத்தினார். ஊர்வலமாக பள்ளியை வந்தடைந்தும் சீர்வரிசை கொண்டு வந்த நபர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


    ×