search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகாசி பட்டாசு"

    • ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும்.
    • டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.

    சிவகாசி:

    "குட்டி ஜப்பான்" என்று அழைக்கப்படும் சிவகாசியில் உற்பத்தியாகும் பட்டாசுகள் இந்தியாவின் 90 சதவீத பட்டாசு தேவையை பூர்த்தி செய்கிறது. இங்கு கம்பி மத்தாப்பு துவங்கி வானில் வெடித்து சிதறி கண்களுக்கு விருந்தளித்து வர்ண ஜாலங்களை நிகழ்த்தும் பேன்சி ரகம் வரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் ஒவ்வொரு ஆண்டு தீபாவளி பண்டிகைக்கும் புதிய யுக்தியை கையாண்டு வாடிக்கையாளர்களையும், அதிலும் குறிப்பாக சிறுவர், சிறுமிகளையும், இளைஞர்களையும் கவரும் விதத்தில் புதுப்புது பட்டாசு வகைகளை வித்தியாசமான முறைகளில் தயாரித்து அறிமுகப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

    அதேபோன்று இந்த வருடமும் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பல்வேறு தொழில்நுட்பங்களில், உற்பத்தியான புதிய ரக பட்டாசுகள் குழந்தைகளையும், இளைஞர்களையும் பரவசப்படுத்தும் விதமாக வந்துள்ளது. தீபாவளி பண்டிகை விற்பனைக்காக பட்டாசு கடைகளில் குவிந்து, கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் வரிசையாக அணிவகுத்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கிரிக்கெட் கோப்பை கிரிக்கெட் போட்டியை பெருமைப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பேட்-பால் என்ற பட்டாசு சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

    திரியில் தீயை பற்ற வைத்தவுடன், கிரிக்கெட் மட்டையிலிருந்து கம்பி மத்தாப்பு போல எரிந்து, பந்திலிருந்து வண்ண நிறங்களில் புகை வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதே போல் இளைஞர்களையும், இளம்பெண்களை கவரும் வகையில் காதலை வெளிப்படுத்தும் ஆர்டின் வடிவ கம்பி மத்தாப்பு, மல்லிகை பூ போல் வெடித்து சிதறும் மதுரை மல்லி புஸ்வானம் பட்டாசுகள் இந்த ஆண்டு புதிய வரவாக அமைந்துள்ளது.

    கிக்கபிள்ஸ் என்ற பட்டாசு மேல் கவர் சாக்லேட் கவர் போலிருந்து, அதன் திரியில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் சுழல்வது போல சுழன்று, அதிலிருந்து 2 பம்பரங்கள் தனியாக வெளியேறி கலர் வெளிச்சத்துடன் சுழல்கிறது. சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு தனித்தனியே வடிவமைக்கப்பட்டுள்ள கிண்டர்ஜாய் சாக்லேட் வடிவ பட்டாசில் தீயை பற்ற வைத்தவுடன் சக்கரம் போல சுற்றி, அதிலிருந்து 2 வண்ணத்து பூச்சிகள் பிரிந்து மேலே எழும்பி சென்று சடசடவென வெடித்து சிதறும்.

    ஹனி பீஸ் என்ற பட்டாசு கொளுத்தியவுடன், பச்சை, சிவப்பு நிறங்களில் ஒளிர்ந்து, தேனீக்கள் பறந்து மேலே செல்வது போல் தெரியும். பைவ்ஜி பட்டாசை பற்ற வைத்தவுடன், 5 வண்ண கலர்களில் பைப்பிலிருந்து ஒளிர்ந்து வெளிவரும். டிவின் லைட்டிங் பால் என்ற பட்டாசை திரியில் பற்ற வைத்தவுடன் நீர்வீழ்ச்சியை போல ஒளி மிளிர்ந்து பிளாஸ்டிக் கலர்களில் சிறு பந்துகள் வெளிவரும்.

    பாம்பு சக்கரம் என்ற பட்டாசை பற்ற வைத்தவுடன் சக்கரங்கள் சுழன்று, அதிலிருந்து கரும் நிறத்தில் பாம்புகள் படையெடுத்து வெளிவரும். அதேபோன்று மீன், முதலை, துப்பாக்கி போன்ற வடிவில் உருவாக்கப்பட்டுள்ள பட்டாசுகளில் தீயை பற்ற வைத்த உடனே தீப்பிழம்பு சீறிப்பாய்ந்து முடிவில் வண்ண வண்ண நிறத்தில் புகை அதிலிருந்து வெளிவரும்.

    இதுபோன்ற 15-க்கும் மேற்பட்ட பார்பி பொம்மை வடிவ பட்டாசு, ஹேப்பிஜி ராபி, மீமோ, கடல்குதிரை, மோட்டுபட்லு, ஹார்க், கிட்ஸ்ஜோன், கோல்டன் லைன், ட்ரோன், ஸ்கை கிங் படாபீகாக், பப்ஜி உள்ளிட்ட சிறுவர்களுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் கார்ட்டூன்களில் வடிமைத்த பட்டாசுகள் அனைத்து தரப்பினர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    தீபாவளிக்கு இன்னமும் ஒரு வாரமே உள்ள நிலையில், இப்பொழுதே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பட்டாசு ரகங்களை சிறுவர், சிறுமிகள் ஆராய தொடங்கி, புதிய வகை பட்டாசுகளை வாங்கி சந்தோஷத்துடன் வெடித்து மகிழ தீபாவளி கொண்டாட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

    ஆண்டுதோறும் புது வகையான பட்டாசுகளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதால் நடப்பாண்டு தீபாவளி பண்டிகை பட்டாசு விற்பனை அமோகமாக இருக்கும் எனவும், குழந்தைகளையும், இளைஞர்களையும் குறி வைத்தே ஒவ்வொரு வருடமும் புது பட்டாசுகள் உற்பத்தியாகி விற்பனைக்கு வருவதால், தீபாவளி பட்டாசு விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சரவெடிகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படாததால் வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் குறைவு தான். தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் பட்டாசு உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இச்சமயத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடந்த 2 வாரங்களாக பட்டாசு உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உரிமையாளர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    • சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
    • பட்டாசுகள் என்றாலே நினைவில் வருவது குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தான்.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகள் தற்போது நேரடி விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அனைத்து ரக பட்டாசுகளும் crackersindia.com மூலம் 85 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது.

    தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். பட்டாசுகள் என்றாலே நினைவில் வருவது குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி பட்டாசு தான்.

    குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுப்பதில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அந்த அளவுக்கு பட்டாசுகளுக்கும் முக்கியத்துவம் தருகிறோம்.

    தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு விற்பனை, வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன. சிவகாசியில் பட்டாசுகள் வாங்க மக்கள் அலைமோதுகின்றன.

    தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ள நிலையில் சிவகாசியில் உள்ள பட்டாசு கடைகள் தற்போது நேரடி விற்பனையில் ஆர்வம் காட்டி வருகின்றன.

    சிவகாசியில் தயார் செய்யும் பட்டாசுகள் தமிழ்நாடு மட்டுமல்லாமல், வெளி மாநிங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி மகிழும் வகையில் பல வண்ணங்களில் பட்டாசுகள் தயார் செய்யப்படுகின்றன.

    கைகளில் சுத்தி விளையாடும் கம்பி மத்தாப்பு, தரையில் வேடிக்கை காட்டும் சங்கு சக்கரம், கண்களுக்கு விருந்து அளிக்கும் வாண வேடிக்கைகள் பொதுமக்கள் ஆர்வமாக வாங்குவதால்

    இந்த தீபாவளி பட்டாசுகளும் மத்தாப்புகளும் நிறைந்த கொண்டாட்ட தீபாவளியாக இருக்கும் என்பதே உண்மை.

    கூட்ட நெரிசலை தவிர்க்கவே வந்துவிட்டது.

    பட்டாசுகள் அனைத்தும் ஆர்டர் கொடுத்த குறிப்பிட்ட நாட்களுக்குள்ளே, டோர் டெலிவரி மற்றும் டிரான்ஸ்போர்ட்டில் பிக் அப் செய்யப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. www.crackersindia.com/shop

    85% சிறப்பு தள்ளுபடில சும்மா சூப்பரான www.crackersindia.com/shop Rs. 2500/- ரூபாயிலே பட்டாசு கிடைக்குது Rs. 6000/-க்கு மேல் வாங்கினீங்கனா இலவச டோர் டெலிவரி கிடைக்கும்.

    முந்துங்கள்.

    ஆர்டர் செய்ய :

    Whats app மூலம் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

    தொடர்புக்கு. WhatsApp no.99949 17010

    தீபாவளிக்கு வாண வேடிக்கை காண

    புக் செய்ய கடைசி தேதி 05.11.2023

    • தீபாவளியை தவிர்த்து மற்ற விழா நாட்கள், திருவிழா, அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
    • 5-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

    சிவகாசி:

    தீபாவளி, தசரா உள்ளிட்ட விழாக்களுக்காக சிவகாசியில் இருந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலை காரணம் காட்டி டெல்லி பகுதியில் பட்டாசு வெடிக்க அந்த மாநில அரசு தடை விதித்தது. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் படிப்படியாக தீபாவளியை தவிர்த்து மற்ற விழா நாட்கள், திருவிழா, அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் 5-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியிலிருந்து அனுப்பப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

    இந்த வருட தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை வாங்க டெல்லி வியாபாரிகள் ஏற்கனவே சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் முன்பணம் செலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆர்டர்களின் பேரில் டெல்லிக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் டெல்லி அரசு பட்டாசு வெடிக்க வருகிற ஜனவரி 1-ந்தேதி வரை தடை விதித்து நேற்று அறிவித்ததால், டெல்லிக்கு என தயார் செய்துவரும் பட்டாசுகள் தேங்கும் என்றும், இதனால் பல பட்டாசு நிறுவனங்கள் இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் கூறுகிறார்கள்.

    ×