search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலம்ப நிகழ்ச்சி"

    • தேவிபட்டினம் கிருஷ்ணா இண்டர்நேஷனல் பள்ளியில் உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது.
    • சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேவிபட்டினம்

    ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சாலையில் உள்ள கிருஷ்ணா இன்டர் நேஷனல் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளையொட்டி உலக சாதனை சிலம்ப நிகழ்ச்சி நடந்தது. ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மதுரை 4-ம் தொழிற்சங்கத்தின் தலைவர் ராஜா கே.பி.எம் நாகேந்திர சேதுபதி, கிருஷ்ணா இண்டர் நேஷனல் பள்ளி தாளாளர் கணேச கண்ணன், தலைமை ஆசிரியர் முத்துக் குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட னர். செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளி தாளாளர் பாபு அப்துல்லா, எம்.ஜி. பப்ளிக் பள்ளி தாளாளர் ஹர்சவர்தன், விளையாட்டு ஆசிரியர் சுந்தரராஜன், துணை வட்டாட்சியர்(ஓய்வு) கருப்பையா, கிராமிய கலைக்குழு வீரவேல், ஒயி லாட்ட கலைக்குழு தலைவர் வரதராஜ், ராமநாதபுரம் மாவட்ட சிலம்பு ஆசிரியர் நலச்சங்க தலைவர் பொரு ளாளர் வருசை கனி,

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் கலை பண்பாட்டு பயிற்சியாளர் நலச்சங்கம் செயலாளர் கண்ணன், பொருளாளர் செந்தில்குமார், உலக சாதனை நிர்வாகிகள் வினோத், பரணிதரன், பரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் 18 மாணவர்கள் கண்ணை கட்டிக்கொண்டு கட்டைக்காலில் நின்று இரட்டை கம்புகளுடன் 2 மணி நேரம் 15 நிமிடமும், ஐஸ் கட்டி மேல் நின்று 2 கம்புகளுடன் 3 மணி நேரமும், 6 பானைகள் மேல் நின்று ஒற்றைக்கம்பு சிலம்பமும், மான் கொம்பு வீச்சு, கண்ணை கட்டிக் கொண்டு இரட்டை சுருள்வாள் சுற்றுவதும், ஆணி மேல் நின்று ஒற்றை தீப்பந்தத்துடன் 3 மணி நேரம் சுற்றுவதையும் செய்து காட்டினர். இது உலக சாதனையாக அமைந்தது.

    ஏற்பாடுகளை இந்நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை நிகழ்ச்சி யின் ஒருங்கிணைப்பாளர், மாஸ்டர் ஹேமநாதன் சிலம்பம் பயிற்சி பள்ளி நிறுவனர் தலைவர் கின்னஸ் உலக சாதனை யாளர் என்.ஹேமநாதன் செய்திருந்தார்.

    சிலம்பம் பயிற்சி பள்ளி செயலாளர், சிலம்ப மாஸ்டர்கள் தங்க குரு நாதன், கலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×