search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறை மரணம்"

    • தங்கச்சாமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.
    • கலெக்டர் ரவிச்சந்திரன், தங்கச் சாமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சமும் வழங்கப்படும் என்றார்.

    புளியங்குடி:

    புளியங்குடி நடு கருப்பழகு தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (வயது 26). மது விற்பனை செய்த வழக்கில் இவரை கைது செய்த புளியங்குடி போலீசார் பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் கடந்த 14-ந்தேதி தங்கசாமி திடீரென உயிரிழந்தார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 9 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் சதன் திருமலைக்குமார், ராஜா, புளியங்குடி நகர்மன்ற தலைவர் விஜயா சவுந்திர பாண்டியன், துணைத் தலைவர் அந்தோணிசாமி, கடையநல்லூர் தாசில்தார் கெங்கா, தங்கசசாமியின் தாயார் கருப்பி, சகோதரர் ஈஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள், வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் இறந்த தங்கச் சாமியின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ. 3 லட்சமும், அவரது தாயா ருக்கு முதியோர் பென்ஷ னும் ஏற்பாடு செய்து தரப்படும் . மேலும் அவரது சகோதரருக்கு நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக பணி வழங்கப்படும் என்றார்.

    மேலும் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தங்கசாமியின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு தரும் ரூ.3 லட்சத்தோடு, மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றார்.இதையடுத்து இறந்த வாலிபரின் உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.

    ×