search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் படுகாயம்"

    • திருப்பத்தூரில் வாகனம் மோதி 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.
    • இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புது தெருவை சேர்ந்தவர் முகமது. காய்கறி வியாபாரி. நேற்று மாலை இவரது மகன் முகமதுஅஸ்லம்(6), மகள் அப்சரா பானு(4) இருவரும் மதுரை ரோட்டில் உள்ள கடைக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் இருவர் மீது மோதி சென்றது. அக்கம் பக்கத்தினர் உடனடியாக இருவரையும் தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுவன் முகமது அஸ்லாமுக்கு காது, மூக்கு உட்பட பகுதிகளில் ரத்தக்கசிவு இருந்ததால் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். இந்த சம்பவம் குறித்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் கலைவாணி வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×