search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவர்கள் ஓட்டம்"

    • தப்பி ஓடிய மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருமுல்லைவாயல்:

    ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள அண்ணா தெருவில் தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையின் அங்கீகாரம் பெற்ற 'லைப் லைன்' என்னும் போதை மறுவாழ்வு சிறார் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு போதைப் பழக்கத்திற்கு அடிமையான சிறுவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கப்பட்டு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இங்கு 13 சிறார்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் இங்கு தங்கியிருக்க விருப்பமில்லாமல் தப்பி செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த போதை மறுவாழ்வு மையத்தில் இருந்த மணலி, கொருக்குப்பேட்டை, எம்.கே.பி. நகர், விருகம்பாக்கம், சர்மா நகர், அம்பத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வந்து தங்கி இருந்த 7 சிறுவர்கள் நேற்று முன்தினம் மையத்தின் காவலாளியிடமிருந்து சாவியை பறித்து கேட்டை திறந்து மையத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி திருமுல்லைவாயல் போலீசில் புகார் கொடுத்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் மையத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் நேற்று காலை 7 பேரில் 5 சிறுவர்கள் தங்கள் வீட்டுக்கு சென்றதால் மீண்டும் மறுவாழ்வு மையத்திற்கு பெற்றோர் மூலம் வந்து விட்டனர். இந்நிலையில் தப்பி ஓடிய மேலும் 2 சிறுவர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிறார் மறுவாழ்வு மையத்திலிருந்து 7 சிறுவர்கள் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு பணியில் காவலர் இருந்து வந்தார். நேற்று இரவு இல்லத்தில் இருந்த 6 சிறுவர்கள் திடீரென்று மாயமானார்கள்.
    • கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த சாவடி பகுதியில் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட 18 வயதுக்குட்பட்ட 13 சிறுவர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பு பணியில் காவலர் இருந்து வந்தார். நேற்று இரவு இல்லத்தில் இருந்த 6 சிறுவர்கள் திடீரென்று மாயமானார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி 6 சிறுவர்களை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

    கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கூர்நோக்கு இல்லத்தில் இருந்து எப்படி தப்பித்து சென்றார்கள்? என்று விசாரித்தனர்.

    இதில் எந்த பொருளையும் உடைக்காமலும், சாதாரணமாக 6 சிறுவர்கள் தப்பித்து சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    கடலூர் கம்மியம்பேட்டை பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது 2 சிறுவர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் கூர்நோக்கு இல்லத்தில் இருந்து தப்பித்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து 2 சிறுவர்களை போலீசார் மீட்டனர்.

    மேலும் மீதம் உள்ள 4 சிறுவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள்? என்னென்ன வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×