search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவன் புகார்"

    • தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை.
    • நான் சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் ஜாபர் கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி பரானா திருமணம் ஆகி சுமார் 18 ஆண்டுகள் ஆகின்றன.

    இவர்களுக்கு 5 ஆண் பிள்ளைகள் உள்ளனர். ஜாபர் குடித்துவிட்டு மனைவி பரானாவிடம் தினந்தோறும் தகராறு செய்து வந்தார். இதனால் நேற்று மனம் உடைந்து பரானா மருந்து குடித்தார். அவர் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனை தொடர்ந்து ஜாபர் குடித்துவிட்டு மகன்களை அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனைக் கண்ட ஜாபருடைய 2-வது மகன் நபில் (வயது 13) என்பவர் அவனது சிறிய சைக்கிளில் போலீஸ் நிலையம் சென்றான். போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதியிடம் தனது தந்தை தினமும் குடித்துவிட்டு ரகளை செய்வதாக புகார் தெரிவித்தான்.

    தந்தை குடித்துவிட்டு குடும்ப செலவிற்கு பணம் தருவதில்லை. என்னுடைய அண்ணன் கபில் (15) சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.

    நான் இங்கு சமோசா விற்பனை செய்து குடும்பத்தை பார்த்து வருகிறேன். என்னுடைய 3 தம்பிகளை பள்ளியில் படிக்க வைத்து வருகிறேன்.

    தந்தை தினம்தோறும் குடித்துவிட்டு அம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு அடிப்பதால் மனவேதனை அடைந்த என்னுடைய அம்மா நேற்று தற்கொலை செய்து கொள்வதற்காக விஷம் குடித்துவிட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    என் தந்தையை தயவுசெய்து கைது செய்து ஜெயிலில் அடையுங்கள் என கூறினான். புகாரின் பேரில் ஜாபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து அறிவுரை கூறி பேலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    ×