search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுவனிடம் விசாரணை"

    • வி.ஏ.ஓ அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்து முக்கிய கோப்புகள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை ஆகியவை எரிந்து நாசமானது.
    • 10 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுவன் விளையாட்டுதனமாக தீக்குச்சியை உரசி அலுவலகத்தில் போட்டு சென்றதாக தெரிவித்தார்.

    குள்ளனம்பட்டி:

    நத்தம் அருகே கோட்டையூரில் உள்ள வி.ஏ.ஓ அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்து முக்கிய கோப்புகள் மற்றும் பயனாளிகளுக்கு வழங்க இருந்த வேட்டி, சேலை ஆகியவை எரிந்து நாசமானது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மற்றும் அலுவலக ஊழியர்கள் தீயை அணைத்தனர்.

    இதுகுறித்து வி.ஏ.ஓ முருகவேல் நத்தம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அதேபகுதிைய சேர்ந்த சிறுவன் வி.ஏ.ஓ அலுவலகத்தில் தீப்பற்றியபோது அங்கிருந்து ஓடியது தெரியவந்தது.

    அந்த 10 வயது சிறுவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சிறுவன் விளையாட்டுதனமாக தீக்குச்சியை உரசி அலுவலகத்தில் போட்டு சென்றதாக தெரிவித்தார். இதனைதொடர்ந்து சிறுவனை இளஞ்சிறார் நீதிக்குழுமம் முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர்.

    ×