search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுத்தைப்புலிகள்"

    • 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைப்புலிகளை அறிமுகம் செய்ய ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.
    • தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகளை கொண்டுவருவதற்கான அந்நாட்டு அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    புதுடெல்லி:

    தீவிர வேட்டை, இருப்பிட அழிவு காரணமாக இந்தியாவில் சிறுத்தைப்புலிகள் கடந்த 1952-ம் ஆண்டு முற்றிலுமாக அழிந்துவிட்டன.

    இந்நிலையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைப்புலிகளை அறிமுகம் செய்ய ஒரு செயல்திட்டம் வகுக்கப்பட்டது.

    அதன்படி முதல்கட்டமாக, ஆப்பிரிக்காவின் நமீபியா நாட்டில் இருந்து 8 சிறுத்தைப்புலிகள் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.

    அவற்றை மத்தியபிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் பிரதமர் மோடி கடந்த ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி தனது பிறந்தநாளன்று திறந்துவிட்டார்.

    இந்நிலையில், தென்ஆப்பிரிக்காவில் இருந்து 2-வது கட்டமாக 12 சிறுத்தைப்புலிகளை கொண்டுவருவதற்கான அந்நாட்டு அதிகாரிகள் உடனான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    அங்கிருந்து சிறுத்தைப்புலிகள் குனோ தேசியப் பூங்காவுக்கு இந்த மாதம் கொண்டுவரப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×