search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுதானிய சத்துமாவு"

    • சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது.
    • இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

    நம்முடைய பாரம்பரிய உணவுப் பொருட்களான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. சிறுதானியங்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும், தூக்கத்தை சீராக்கும், அதிகப்படியான உடல் எடையையும், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும். புற்றுநோய் வராமல் பாதுகாக்கும், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை குணப்படுத்தும்.

    பல்வேறு சிறுதானியங்களை ஒன்றாக சேர்த்து அரைத்த சத்துமாவு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. இல்லத்தரசிகள் இந்த சிறுதானிய சத்துமாவு தயாரிப்பை சுயதொழிலாகவும் செய்ய முடியும். எந்தவிதமான பதப்படுத்தும் பொருட்களும் சேர்க்காமல் தயாரிப்பதால், சிறுதானிய சத்துமாவுக்கு வரவேற்பு நன்றாகவே இருக்கும். பெரிய அளவிலான முதலீடுகள் இதற்கு தேவையில்லை. முதலில் உங்களுடைய தேவைக்காக தயாரித்து பயன்படுத்தி பாருங்கள். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக வியாபார நோக்கில் தயாரித்து விற்பனை செய்யலாம். இது பற்றிய தகவல்கள் இதோ...

    சிறுதானிய சத்துமாவு தயாரிக்க தேவையான பொருட்கள்:

    பிசினி அரிசி, மூங்கில் அரிசி, கருப்பு கவுனி அரிசி. மாப்பிள்ளை சம்பா அரிசி, சிவப்பு அரிசி, முழு கோதுமை. வெள்ளை சோளம், ராகி, கொள்ளு, குதிரை வாலி, வரகு,சாமை, தினை, கம்பு, பார்லி, இவற்றை தலா 100 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

    செய்முறை:

    ஒரு பெரிய பாத்திரத்தில் எல்லா பொருட்களையும் கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 3 அல்லது 4 முறை கழுவிக் கொள்ளவும். பின்னர் தண்ணீரை நன்றாக வடியச் செய்து, சுத்தமான பருத்தித் துணியில் அவற்றை கொட்டி நிழலில் உலர்த்தவும்.

    ஈரப்பதம் முழுவதுமாக நீங்கிய பிறகு, மாவு மில்லில் கொடுத்து மென்மையான மாவாக பொடித்துக் கொள்ளவும். மாவில் இருக்கும் சூடு முழுவதுமாக நீங்கும் வரை ஆற வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து அது சூடானதும், இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி மிதமான தீயில் வறுக்கவும். சுத்தமான பருத்தித் துணியில் அந்த மாவைக் கொட்டி மீண்டும் ஆற வைக்கவும்.

    பின்னர் ஈரப்பதம் இல்லாத, காற்று புகாத, சுத்தமான சில்வர் அல்லது கண்ணாடி டப்பாக்களில் மாவை நிரப்பி பத்திரப்படுத்தவும். தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தி வரலாம்.

    சிறுதானிய சத்துமாவு கஞ்சியை இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வழங்குவதைத் தவிர்க்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகள், இளம் பருவத்தினர். கர்ப்பிணிகள், முதியவர்கள் இதை சாப்பிடலாம். இந்த சத்துமாவில் கஞ்சி மட்டுமில்லாமல் புட்டு.

    கொழுக்கட்டை இடியாப்பம் என பலவிதமான பல காரங்களை தயாரித்து வழங்கலாம். வணிக முறையில் சந்தைப்படுத்துவதற்கான சான்றிதழ்களைப் பெற்று. தரமான முறையில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

    ×