என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சிறுதானிய உணவகம்"
- சிறுதானிய உணவகம் அமைக்க மகளிர் சுய உதவிகுழு விண்ணப்பிக்கலாம்.
- இந்த தகவலை விருதுநகர் மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெண்களின் பொருளாதார மேம்பாடு என்பது வலுவான மற்றும் சமத்துவ சமுதாயத்தை வளர்ப்பதற் கான அடிப்படையாகும், வறுமை ஒழிப்பு, சிறந்த சுகாதாரம், கல்வி மற்றும் ஒட்டு மொத்த கிராமப்புற பொருளாதார மேம்பாடு ஆகியற்றிற்காக பெண்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
எனவே, ஊட்டச்சத்து குறைபாடு அற்ற சமுதாயத் தை உருவாக்கும் பொருட்டு பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் புதிய பாதையை உருவாக்கி வருகிறது.
மேலும், சர்வதேச சிறு தானிய ஆண்டாக 2023-ம் ஆண்டு கொண்டாடப்படுவதால் தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட கலெக்டர் வளாகத்திலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் சிறு தானிய உணவகம் அமைத் திட கீழ்க்கண்ட நிபந்தனை களுடன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சிறுதானிய உணவகம் நடத் திட கீழ்க்காணும் தகுதியுள்ள மற்றும் விரும்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகளி லிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது.
அதன்படி மகளிர் சுய உதவிக்குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தேசிய ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை தகவல் அமைப்பு இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.
கூட்டமைப்பாக இருக் கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு சான்று பெற் றிருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழு, உற்பத்தியாளர் குழு அல்லது கூட்ட மைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுப வம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும் விவரங் களுக்கு ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம் என அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்