search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறப்பு குறைதீர் முகாம்"

    • தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்:

    பொது விநியோகத்தி ட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலகங்களில் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத்திட்டம் தொடர்பாக சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது.

    இந்த முகாம்களில் ரேசன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய ரேசன் அட்டை மற்றும் நகல் அட்டை கோரி மனு அளிக்கலாம். கைபேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்தும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்தும் புகார் மனு அளிக்கலாம்.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு கோரிக்கை மனு அளித்து தீர்வு காணலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.

    • மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது.
    • ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தேனி:

    தெற்கு மண்டல ஐ.ஜி அஸ்ராகார்க் உத்தரவின்பேரில் தேனி மாவட்ட போலீசார் 124 குழுக்கள் அமைத்து உட்கோட்ட டி.எஸ்.பி தலைமையில் கஞ்சா வியாபாரிகள், ரவுடிகளை பிடிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய வாகனசோதனை மற்றும் தங்கும் விடுதிகளில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் சிறப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்கள், துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு மேளா நடத்தப்பட்டது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக கொடுத்தனர்.

    மாவட்டம் முழுவதும் பெறப்பட்ட மனுக்களில் 300 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இந்த சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் ரவுடி, கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.

    ×