search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த புத்தகம்"

    கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பு இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. #Vairamuthu #KallikattuIdhikasam
    புதுடெல்லி:

    சினிமாவில் மிகச்சிறந்த பாடல்களாலும், தனிச்சிறப்பு பெற்ற நாவல்களாலும், கவிதைகளாலும் உலக அளவில் பிரசித்தி பெற்றவர் கவிஞர் வைரமுத்து. இவர் பல்வேறு புத்தகங்களையும், கவிதைகளையும், திரப்பட பாடல்களையும் இயற்றியுள்ளார். மிகச்சிறந்த இவரது எழுத்துக்களுக்கு பல்வேறு விருதுகள் புகழ்மாலை சூட்டியுள்ளன.

    கவிஞர் வைரமுத்துவின் படைப்பில் 2001-ம் ஆண்டு வெளியிடப்பட்ட புத்தகம் கள்ளிக்காட்டு இதிகாசம். வைரமுத்துவின் இந்த படைப்பு வணிக ரீதியிலும், வாசகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த புத்தகத்தின் இந்தி மொழிப்பெயர்ப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    இந்நிலையில், இந்தி மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கள்ளிக்காட்டு இதிகாசம் இந்த ஆண்டின் சிறந்த புத்தகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வைரமுத்து கூறுகையில், இது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை எனவும், இந்த விருது தமிழக மக்களுக்கே சொந்தம் எனவும் தெரிவித்துள்ளார். #Vairamuthu #KallikattuIdhikasam 
    ×