search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிரமப்படுகின்றனர்"

    • திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் பூதலூரில் ெரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது.
    • மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    பூதலூர்: திருக்காட்டுப்பள்ளி- செங்கிப்பட்டி நெடுஞ்சாலையில் பூதலூரில் ெரயில்வே மேம்பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மேம்பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான இரண்டு சக்கர வாகனங்கள், பஸ்கள், மணல் ஏற்றி வரும் லாரிகள் சென்று வருகின்றன.

    இந்த மேம்பாலத்தில் மேற்புறத்தில் பல இடங்களில் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

    இதனால் அவற்றிலிருந்து விலகி பாதுகாப்பாக வாகனங்களை செலுத்த இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படு கின்றனர்.

    வாகனங்களை வளைத்து நெளித்து ஓட்டுவதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    உடனடி யாக பூதலூர் ெரயில்வே மேம்பாலத்தில் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளை சீரமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    அதேபோல விண்ண மங்கலம் அருகே இதேசாலையில் வெண்ணாற்றில் அமைந்து ள்ள பாலத்திலும்குண்டும் குழியுமாகவே காணப்படுகிறது.

    செங்கிப்பட்டி- திருக்காட்டு பள்ளியை இைண ப்பதற்கு விண்ணமங்கலம் வெண்ணாற்றுபாலம் பிரதானமான பாலமாக உள்ளதால் இந்த பாலத்தில் மேற்பகுதியில் உள்ள சாலையில் குண்டும் குழியுமான பகுதிகளை தற்காலிகமாக சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    பொங்கல் பண்டிகை காலத்தில் ஏராளமான வாகனங்கள் பூதலூர் ரெயில்வே மேம்பாலம், மற்றும் விண்ணமங்கலம் வெண்ணாற்று பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலையில் சீரான முறையில் போக்குவரத்து நடைபெற இரண்டு பாலங்களின் மேல் உள்ள குண்டு குழிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர்.

    ×