search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்"

    • கணவரிடம் தீபாவளி பண்டிகைக்காக அம்மா வீட்டுக்கு போகனும் என்று கூறினார்
    • உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கவுண்டம்பாளையம் அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் ரகுபதி(35).இவரது மனைவி நதியா (32). இவர்களுக்கு திருமணம் ஆகி 13 வருடங்கள் ஆகிறது. கடந்த 10 வருடமாக கொத்தமங்கலம் அருந்ததியர் தெருவில் குடும்பத்துடன் குடியிருந்து வந்தனர். இந்த நிலையில் கணவரிடம் தீபாவளி பண்டிகைக்காக அம்மா வீட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

    நதியாவின் கணவர் அடுத்த வாரம் தீபாவளிக்கு செல்லலாம் என்று சொல்லிவிட்டு வேலைக்கு சென்று விட்டார். ,வீட்டில் இருந்த நதியா திடீரென உடலில் மண் எண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.இதையடுத்து அவர் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×