search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.எம்.சி. மருத்துவமனை"

    • அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எல்.ஆர்.கே.அப்பு மனு
    • வியாபாரிகள், டிரைவர்கள் பாதிக்கப்படுவார்கள்

    வேலூர்:

    வேலூர் சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்னர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,500 படுக்கை வசதியுடன் கூடிய புதிய கிளை மருத்துவமனையை தொடங்கியது.

    இந்நிலையில், வேலூர் சிஎம்சி மருத்துவமனை வளாகத் தில் செயல்பட்டு வந்த இருதய பிரிவானது ராணிப் பேட்டை மாவட்டத்துக்கு மாற்றப்படுவதாகவும், அவ சர உதவி மற்றும் ஆலோசனை மட்டும் இங்கு வழக்கம்போல் செயல்படும் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

    மேலும் மருத்து வம னையின் முக்கிய பல பிரிவுகள் ராணிப்பேட்டை மருத்துவமனைக்கு மாற்றப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, சி.எம்.சி. மருத்துவ மனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸை நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

    மனுவில், வேலூர் சிஎம்சி மருத்துவ மனைக்கு வெளிநாடு, வெளியூர் மற்றும் உள்ளூர் என பல தரப்பு மக்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இவர்கள், வருவதால் வேலூரை சேர்ந்த பல வியாபாரிகள், டிரைவர்கள், ஓட்டல்கள் என பல தரப்பு மக்கள் ஆதாயம் அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், மருத்து வமனையில் இயங்கி வரும் பல முக்கிய பிரிவுகள் ராணி ப்பேட்டைக்கு மாற்ற ப்பட் டால் நோயாளிகள் சிரமப் படுவது மட்டுமின்றி, மரு த்துவமனையை நம்பி பிழைப்பு நடத்தும் பலரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

    எனவே, மருத்துவமனையில் இய ங்கி வரும் எந்த பிரிவையும் மாற்ற வேண்டாம். மாறாக ராணிப்பேட்டை மருத்துவ மனையில் புதிய பிரிவு களை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப் பட்டிருந்தது.

    கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மருத்துவமனை இயக்குனர் விக்ரம் மேத்யூஸ், உரிய ஆலோசனைக்கு பின் பிரிவுகளை மாற்றாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

    ×