search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க மையம்"

    • முகாபே-யை ஆட்சியில் இருந்து அகற்றி அதிபரானார் நங்கக்வா
    • சேவை பணியாளர்களை தேவையற்ற விசாரணைகளில் ஈடுபடுத்துகின்றனர் என்கிறது அமெரிக்கா

    2017ல், ஜிம்பாப்வே நாட்டில், 1980 முதல் 1987 வரை பிரதமராகவும், 1987 முதல் 2017 வரை அதிபராகவும் இருந்தவர் ராபர்ட் முகாபே (Robert Mugabe).

    அமெரிக்க உதவி மூலம், ராணுவ புரட்சி செய்து ஆட்சியிலிருந்த அதிபர் ராபர்ட் முகாபே-யை பதவியில் இருந்து அகற்றி, அந்நாட்டில் அதிபராக பதவியேற்றவர், எம்மர்சன் நங்கக்வா (Emmerson Mnangagwa).

    ஆட்சிக்கு வந்ததும் ஜனநாயக வழியில் ஆட்சியை நடத்துவதாக நங்கக்வா, அமெரிக்க அரசிடம் உறுதி அளித்திருந்தார்.

    ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முகாபே செய்திருந்த அனைத்து தவறுகளையும் நங்கக்வா செய்து வருவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டி வந்தது. இரு நாடுகளுக்கு இடையே இரு தசாப்தங்களுக்கும் மேலாக நல்லுறவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்நாட்டில் ஜனநாயகம் தழைப்பதை உறுதி செய்யவும், வறுமையில் வாடும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடைவதை உறுதி செய்யவும், சர்வதேச மேம்பாட்டிற்கான அமெரிக்க மையம் (US Agency for International Development) எனும் அமெரிக்க அமைப்பு, அங்கு சேவை புரிந்து வந்தது.


    இந்நிலையில், இப்பணியில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை, ஜிம்பாப்வே அரசு அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதாக அமெரிக்க அரசு குற்றம் சாட்டியுள்ளது.

    "ஜிம்பாப்வே நாட்டில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க சேவை பணியாளர்களை, ஜிம்பாப்வே அதிகாரிகள் திடீரென தடுத்து நிறுத்தி, அவர்களை முரட்டுத்தனமாக கையாண்டு, தேவையற்ற பல நீண்ட விசாரணைகளில் ஈடுபடுத்தி, இரவு முழுவதும் பயணங்களில் ஈடுபடுத்தி, பிறகு காரணமின்றி அமெரிக்காவிற்கு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர்" என அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

    மேலும், ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக, ஜிம்பாப்வேயின் அதிபர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மீது குற்றம் சாட்டியது.

    தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதாக ஜிம்பாப்வே, அமெரிக்கா மீது குற்றம் சாட்டி உள்ளது.

    ×