என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சமையல் மாஸ்டர் தற்கொலை"
- விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்து (வயது 49), சமையல் மாஸ்டர். இவர், நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயபால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தற்கொலை செய்து கொண்ட முத்துவுக்கு விஜயராணி என்ற மனைவியும், அரிகரன் என்ற மகனும், அனுசுயா என்ற மகளும் உள்ளனர்.
- தாய் இறந்த துக்கத்தில் மனஉளைச்சலில் மது பழக்கத்திற்கு அடிமையானார்.
- தனது வீட்டிலேயே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் சவேரியார்பாளையத்தை சேர்ந்தவர் ஜான்பீட்டர் மகன் பிரிட்டோ(29). சமையல் மாஸ்டரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டோவின் தாயார் உயிரிழந்துவிட்டார்.
அப்போது முதல் மனஉளைச்சலில் மது பழக்கத்திற்கு அடிமையானார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தனது தாய் கனவில் வருவதாக கூறி உறவினர்களிடம் புலம்பி வந்துள்ளார். இதனால் அவருக்கு மனநலஆேலசானை வழங்கப்பட்டது.
இன்று காலை தனது வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து அறிந்ததும் நகர் தெற்கு போலீசார் விரைந்து சென்று பிரிட்டோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்