search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமுதாயகூடம்"

    • மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது.
    • ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது

    ஊத்துக்குளி, ஜூலை.19-

    ஊத்துக்குளி ஒன்றியத்துக்கு உட்பட்ட மொரட்டுப்பாளையம் ஊராட்சி, சப்பட்டநாயக்க ன்பாளையத்தில் புதிய சமுதாயக்கூடம் அமைக்க பூமி பூஜை செய்யப்பட்டது. ரூ. 43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி திட்ட நிதியின் கீழ் இந்த சமுதாயக்கூடம் அமைய உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் என். பிரபு தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக ஒன்றிய தலைவர் பி. பி.பிரேமா ஈஸ்வரமூர்த்தி கலந்து கொண்டார்.

    மேலும் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் என். கணேஷ்குமார், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாலன், கலாமணி உள்பட பல கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே ரூ.15 லட்சத்தில் சமுதாயகூட கட்டுமான பணிகளை பெரிய புள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது.

    மேலூர்

    மேலூர் தொகுதிக்குட்பட்ட கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள வஞ்சிநகரம் ஊராட்சி கல்லங்காடு சிவன் கோவிலில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமிபூஜை நடந்தது.

    பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. பூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ தமிழரசன், கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வளர்மதி குணசேகரன், மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, மாவட்ட வேளாண் விற்பனை குழுதலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், முன்னாள் கொட்டாம்பட்டி யூனியன் சேர்மன் வெற்றிச்செழியன், முன்னாள் துணைத்தலைவர் குலோத்துங்கன், மேலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மேலவளவு விஜயராகவன், கிடாரிபட்டி சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    ×