search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தன மாரியம்மன் கோவில்"

    • பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    முக்கூடல்:

    முக்கூடல் அருகே உள்ள சடையப்பபுரத்தில் அமைந்துள்ள இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கடந்த செவ்வாய்க்கிழமை கால்நாட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தினமும் மதியம், பகல்- இரவு நேரங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் அன்னதானம் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டி ஹரிராம் சேட் தலைமையில் விழா குழுவினர் செய்துள்ளனர். 

    ×