search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சண்முகநாதன்"

    • நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார்.
    • தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு, முத்தையாபுரம் பல்க் சந்திப்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் ஏற்கனவே உள்ள உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்து கொள்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் மற்றும் உறுப்பினர் படிவம் விநியோகிக்கும் நிகழ்ச்சி நேற்று தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கி பேசினார். தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை படிவங்களை நிர்வாகி களிடம் வழங்கி உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அ.தி.மு.க.அமைப்பு செயலாளர் என். சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் ஹென்றி, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் வீரபாகு, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, முன்னாள் அரசு வக்கீல்கள் யு.எஸ்.சேகர், சுகந்தன் ஆதித்தன், ஆண்ருட்மணி,முனியசாமி, எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் வலசை வெயிலூமுத்து, பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், முன்னாள் துணை மேயர் சேவியர், சார்பு அணி செயலாளர்கள் டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே.பிரபாகர், மாநகராட்சி எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, ஓன்றிய செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், பகுதி இளைஞரணி செய லாளர் திருச்சிற்றம்பலம், துணைசெயலாளர் டைகர் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தூத்துக்குடி மத்திய தெற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பும், முத்தையாபுரம் பல்க் சந்திப்பிலும் அமைக்கப்பட்டு இருந்த கோடை கால தண்ணீர் பந்தலை மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முக நாதன் திறந்து வைத்து பொது மக்களுக்கு குளிர்பானங்கள், இளநீர், பழவகைகள் வழங்கினார்.

    ×