என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சட்டரீதியான நடவடிக்கை"
- தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பள த்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
- சட்டவிதிமுறைகளை பின்பற்றாத 35 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 70 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி,
தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பள த்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
அவ்வாறு விடுமுறை அளிக்காதபட்சத்தில், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.
இது குறித்த விவரங்கள் மாவட்ட தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெங்கடாசலபதி தலைமையில் அதிகாரிகள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி நகரில் உள்ள 94 நிறுவனங்களில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டம், விதிகளின் கீழ் ஆய்வு செய்தனர்.
இது குறித்து உதவி ஆணையர் வெங்கடாசலபதி கூறியதாவது:-
இந்த சிறப்பு ஆய்வின் போது 48 கடைகள், 46 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 94 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சட்டவிதிமுறைகளை பின்பற்றாத 35 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 70 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்