search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை-அதிகாரி தகவல்
    X

    தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 70 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை-அதிகாரி தகவல்

    • தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பள த்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
    • சட்டவிதிமுறைகளை பின்பற்றாத 35 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 70 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி,

    தேசிய விடுமுறை தினமான தொழிலாளர் தினத்தன்று அனைத்து தொழிலாளர்களுக்கு சம்பள த்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.

    அவ்வாறு விடுமுறை அளிக்காதபட்சத்தில், பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இரட்டை ஊதியம் அல்லது மாற்று விடுப்பு வழங்கப்பட வேண்டும்.

    இது குறித்த விவரங்கள் மாவட்ட தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே தெரிவித்து, அதற்கான நகல்களை அனுப்பி வைக்க வேண்டும்.

    இந்த நிலையில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) வெங்கடாசலபதி தலைமையில் அதிகாரிகள், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி நகரில் உள்ள 94 நிறுவனங்களில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் உணவு நிறுவனங்கள் சட்டம், விதிகளின் கீழ் ஆய்வு செய்தனர்.

    இது குறித்து உதவி ஆணையர் வெங்கடாசலபதி கூறியதாவது:-

    இந்த சிறப்பு ஆய்வின் போது 48 கடைகள், 46 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 94 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், சட்டவிதிமுறைகளை பின்பற்றாத 35 கடைகள், 35 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 70 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×