search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழு"

    • விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிகளுக்கான நிதியுதவி பத்திரங்களை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் வழங்கினார்.
    • கலெக்டர் அலுவலகம் ரூ.120 கோடியில் கட்டப் பட்டு இன்னும் 4 மாதங்களில் திறக்கும் நிலையில் உள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுத் தலைவர் அன்பழகன் தலைமையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடை பெற்றது.

    உறுப்பினர்கள் ராஜேஷ் குமார், ஜவாஹிருல்லா, சிவக்குமார், மணியன், காந்திராஜன், சிந்தனை செல்வன் மற்றும் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அப்போது விபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்து கல்வி பயிலும் மாணவ-மாணவிக ளுக்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் குறித்த கால வைப்புத் தொகையான ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.75 ஆயிரத்துக்கான பத்திரங்களை மதிப்பீட்டு குழுத்தலைவர் அன்பழகன் வழங்கினார்.

    இக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் தெரிவித்ததாவது:-

    தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரையிலும் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் ரூ.120 கோடியில் கட்டப் பட்டு இன்னும் 4 மாதங்களில் திறக்கும் நிலையில் உள்ளது. கால்நடை மருந்தகம் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு விரைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட உள்ளது. அரசு தலைமை மருத்துவமனையில் 6 தளங்களுடன் 76 ஆயிரம் சதுர அடியில் ரூ.22 கோடியில் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டு வருகிறது. தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் என்ற முறையில் விளையாட்டு துறை அமைச்சர் மூலமாக ரூ.15 கோடியில் உள் விளையாட்டு அரங்கத்திற்கு ஒப்பந்தப்புள்ளி போடப்பட்டு விரைவாக இந்த பணி நடைபெற இருக்கிறது, காவல்துறையின் தலைமை கட்டிடம் ரூ.54 கோடி மதிப்பில் கட்டி திறக்கும் நிலையில் உள்ளது. ரூ.400 கோடிக்கும் மேல் தற்போது தென்காசியில் மட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கூட்டத்தில், தென்காசி எம்.எல்.ஏ.க்கள் பழனிநாடார், ராஜா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, வன அலுவலர் முருகன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகிரிசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ராஜமனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி மற்றும் துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×