search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரி க்கைகளை"

    • பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    நாகர்கோவில், அக். 27-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூ ராட்சிகளிலும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆண்டிற்கு 150 நாட்கள் வேலையில் ரூ.600 கூலி வழங்க வேண்டும்.

    அரசு அறிவித்த தினக்கூலி ரூ.281-ஐ குறைக்காமல் வழங்கிடவும், நிலுவையில் உள்ள ஊதிய பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் குமரி மாவட்ட கிளை சார்பில் இன்று நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். பொருளாளர் கிறிசாந்துமேரி மற்றும் துணை தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.பி.ஐ.எம். மாவட்ட செயலாளர் செல்ல சாமி உள்பட ஆண்கள், பெண் கள் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    ×