search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோப்பை அறிமுக விழா"

    • ஆண்கள் ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா நடை பெற்றது.
    • புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டிக்கான கோப்பை அறிமுக விழா நடை பெற்றது.

    விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கி கலந்து கொண்டார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:

    தமிழக முதல்-அமைச்சர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறைக்கு பல்வேறு திட்ட ங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

    இந்தியா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து நடத்தும் ஆசியக் கோப்பை க்கான ஆண்கள் ஆக்கி போட்டிகள் வருகின்ற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடை பெற உள்ளது.

    இந்த போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா நாடுகளை சேர்ந்த ஆக்கி அணிகள் கலந்து கொள்கிறது.

    இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு வழங்க ப்படும் பரிசுக்கோப்பை தமிழ்நாடு முழுவதும் எடுத்து சென்று பொது மக்கள் பார்வைக்கு அறி முகம் செய்யப்பட்டு வரு கிறது.

    மேலும் இந்த நிகழ்ச்சியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.

    மாவட்டங்கள் தோறும் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வரு கிறது. அதன்படி புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலை ப்பள்ளியில் கோப்பை அறிமுக விழா நடந்தது.

    மேலும் 7-வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஆக்கி போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் இந்தியா அணியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த கார்த்தி கலந்து கொள்கிறார்.

    இந்த ஆசிய கோப்பை போட்டியில் கலந்து கொள்ளும் விைளயாட்டு வீரர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்துள்ளது.

    மேலும் மாணவர்கள் படிப்பதுடன் விளையா ட்டிலும் கவனம் செலுத்தி னால் உடலும் ஆரோக்கியம் பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மாவட்டத்தி ற்கும், மாநிலத்திற்கும் மற்றும் இந்தியாவிற்கும் பெருமை தேடி தர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    முன்னதாக கலெக்டர் தலைமையில் 7-வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி கோப்பையினை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் புன்செய்புளி யம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி நகரின் முக்கிய சாலைகளின் வழி யாக புஞ்சை புளியம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வரை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு அய்மன்ஜமால், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சதீஷ்குமார், சத்தியமங்கலம் வருவாய் தாசில்தார் சங்கர்கணேஷ், புன்செய்புளியம்பட்டி நகராட்சி தலைவர் ஜனார்த னன், துணைத்தலைவர் சிதம்பரம், ஆணையாளர் (பொறுப்பு) செல்வம், ரோட்டரி சங்க நிர்வாகிகள் உட்பட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×