search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோதாண்டராமபுரம்"

    • கோதாண்டராமபுரத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
    • ஊராட்சி தலைவர் பிரேமராதா ஜெயம் தலைமை தாங்கி குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் தெற்கு மடத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோதாண்டராமபுரத்தில் 15-வது நிதிக்குழு மானியத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி தலைவர் பிரேமராதா ஜெயம் தலைமை தாங்கி குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். துணைத்தலைவர் சிவக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் வார்டு உறுப்பினர் கண்ணன் மற்றும் வெங்கடேஷ், முருகன், சாத்தாகன்னி, கன்னிகா, சித்ரா, காஞ்சனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×