search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டை மாரியம்மன் அம்மன்"

    • 1-ம் தேதி விடையாற்றி ஊஞ்சல் வனத்திடை அம்மன் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 2-ந் தேதி அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    திண்டுக்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையன்று அம்மன் நகர்வலம் தொடங்கி திண்டுக்கல் நகர் பகுதிகளில் 4 நாட்கள் வீதிஉலா வருவது வழக்கம். அதன்படி ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையான நேற்று கோட்டை மாரியம்மன் வீதிஉலா தொடங்கியது.

    இதையொட்டி காலை 5 மணி அளவில் விநாயகர் வழிபாடு, அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்று 6.30 மணியளவில் வீதி உலா தொடங்கியது. இந்த வீதிஉலா மேற்கு ரதவீதி, கச்சேரி தெரு உட்பட பல்வேறு பகுதிகளில் வலம் வந்து நந்தவனம் ரோட்டில் உள்ள தரகுமண்டி குமாஸ்தாக்கள் சங்க மண்டபத்தில் இரவு தங்கல் நடைபெற்றது. பகலில் வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (சனிக்கிழமை) அம்மன் அங்கிருந்து புறப்பட்டு சொசைட்டி தெரு, பாண்டியன் நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் வலம் வந்து இரவு நாராயண அய்யர் கல்யாண மண்டபத்தில் தங்கல் நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) அங்கிருந்து நகர்வலம் தொடங்கி மேட்டு ராஜக்காபட்டி, ரவுண்டு ரோடு உள்பட பல்வேறு பகுதிகளில் வலம் வந்து மேட்டுராஜக்காபட்டி காளியம்மன் கோவிலில் சுவாமி இரவு தங்கல் நடக்கிறது.

    4-ம் நாளில் அங்கிருந்து அம்மன் புறப்பாடாகி பல்வேறு பகுதிகளில் வலம் வந்து சன்னதி சேருகிறார். அன்று மாலை விடையாற்றி ஊஞ்சல் வனத்திடை அம்மன் காட்சி கொடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 5-ம் நாள் நிகழ்ச்சியாக அடுத்த மாதம் 2-ந் தேதி மாலை மூலஸ்தான அம்மனுக்கு மஞ்சள் காப்பு அலங்காரம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று ஆடி 2-வது வெள்ளி வீதிஉலா நிகழ்வுகள் நிறைவு பெறுகிறது.

    ×