search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோட்டை ஈஸ்வரன் கோவிலில்"

    • ஈரோடு கோட்டை ஈஸ்வ ரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது
    • ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வழியாக சென்று மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா வந்து நிறைவடைந்தது

    ஈரோடு,

    ஈரோடு கோட்டை ஈஸ்வ ரன் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    இதையொட்டி கோவி லில் திருவெம்பாவை மாணிக்க வாசகர் உற்சவம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று அதிகாலை பிச்சாண்டவர் உற்சவம் நடைபெற்றது. பிச்சாண்டவருக்கு அபிஷே கம், தீபாராதனை நடை பெற்றது.

    உச்சிக்கால பூஜை நடை பெற்ற பிறகு பிச்சாண்டவர் புறப்பாடு வீதி உலா நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீவாருணாம்பிகா சமேத ஆருத்ரா கபாலீஸ்வர பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி அளவில் சிவகாமி அம்பிகை சமேத நடராஜர் பெருமாளு க்கு ஆருத்ரா அபிஷேகம் தொடர்ந்து ஆருத்ரா தரிசன வைபவம் நடைபெற்றது.

    இதில் நெய் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், பஞ்சாமிர்தம் அபிஷேகம் உட்பட 14 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 63 நாயன்மாரு க்கும் அபிஷேகம், மகாதீபா ராதனை நடந்தது.

    இதனைத் தொடர்ந்து சாமி வீதி உலா நடைபெற்றது. ஊர்வலம் ஈஸ்வரன் கோவில் வழியாக சென்று மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க், காமராஜர் வீதி வழியாக மீண்டும் கோவிலில் திருவீதி உலா வந்து நிறைவடைந்தது.

    இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை வழிபாடு செய்தனர். இதைத் தொடர்ந்து இன்று மாலை ஊஞ்சல் உற்சவம் நடை பெறுகிறது.

    ×