search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளை அடிக்க முயற்சி"

    • கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின்ரோட்டில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
    • வங்கியின் சுவற்றில் சுத்தியலால் அடித்து துளையிட முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிகாரி அதிர்ச்சியடைந்தார்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசி குண்டு மெயின்ரோட்டில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி, 3 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று வங்கி திறக்கப்பட்டது.

    காலையில் வங்கிக்கு வந்த ஊழியர், ஜெனரேட்டர் போடுவதற்காக பின்பக்கமாக சென்றார். அங்கு வங்கியின் சுவற்றில் சுத்தியலால் அடித்து துளையிட முயற்சி நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதையறிந்த வங்கி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பின்னர் வங்கியின் சுவற்றை துளையிட்டு, கொள்ளையடிக்க முயற்சி நடந்தது குறித்து கிச்சிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரி–வித்தனர். அதன் பேரில், உதவி கமிஷனர் அசோகன், இன்ஸ்பெக்டர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இதில், இரவு 11 மணியளவில் சுவற்றை அடிக்கும் சத்தம் கேட்டதாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் தெரிவித்தனர். தீபாவளி பட்டாசு வெடிக்கும் சத்தத்துடன் இந்த சத்தமும் கேட்டதாக அவர்கள் கூறினர். வங்கியின் சுவர் இருக்கும் இடத்தில், தனியார் கார் ஷெட் ஒன்று உள்ளது. அங்கிருந்த சுவற்றைத் தான் மர்ம நபர்கள் துளையிட முயன்றுள்ளனர்.

    தீபாவளி பண்டிகையை–யொட்டி வங்கி விடுமுறை பயன்படுத்தி, சுவற்றில் துளையிட்டு கொள்ளையடிக்க முயற்சி நடந்ததுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×