search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளிடத்தின்"

    • கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட கோரிக்கை விடப்பட்டுள்ளது.
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், திருமானூர், தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றபபட்டது.

    திருமானூரில் நடைபெற்ற அக்கட்சியின் கோரிக்கை மாநாடு, நிதியளிப்பு பொது கூட்டத்தில். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    திருமானூர், திருமழப்பாடி, தா.பழூர் உள்ளிட்ட பகுதிகளில் கொள்ளிடத்தின் குறுக்கே தடுப்பணைகளை கட்டி விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளை குறைக்க வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாள்களாக அதிகரிக்க வேண்டும். இந்த திட்டத்தை நகர்புறங்களிலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக் கூட்டத்துக்கு அக்கட்சியின் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் டில்லிபாபு தலைமை வகித்தார். மாநில பொதுக் குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா, மாவட்டச் செயலர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், கே.கிருஷ்ணன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏசுதாஸ், சுப்பு, கார்த்திக், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஏ.கணேசன், ஆரோக்கியநாதன், லட்சுமணன், கலைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

    ×