search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொரோனா மாணவர்கள் அச்சம்"

    • தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.
    • இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் கடந்த மாதம் வரை கொரோனா தொற்று இல்லாத நிலை இருந்து வந்தது. அதன் பிறகு தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் போடியில் உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் வீட்டிலேயே தனிமை படுத்திக் கொண்டுள்ளார்.

    இதனால் அவருடன் பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர். அந்த பள்ளியில் கொரோனா பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வேறு யாருக்காவது தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வருகை தருகின்றனர். இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    மேலும் கடந்த கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி விடுபட்டு இருப்பதால் அந்த மாணவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

    கொரோனா தொற்றால் மாவட்டத்தில் உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயமாக உள்ளது.

    ×