search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டில்பாடு"

    • தூண்டில் வளைவு உடைந்து சேதம்
    • வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் பதட்டம்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதியான அரபிக் கடல் பகுதியில் வழக்கமாக ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான கால கட்டங்களில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பது வழக்கம்.

    இந்த ஆண்டும் ஜூன் மாதத்தில் கடல் சீற்றமாக இருந்தது. இந்த நிலை மாறி கடந்த சில நாட்களுக்கு முன்பு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இருப்பினும் அவ்வப்போது கடலில் சீற்றம் இருந்தே வந்தது.

    இதனால் மீன்பிடி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை குளச்சல் அருகே உள்ள கொட்டில்பாடு பகுதியில் கடல் திடீரென சீற்றமாக காணப்பட்டது. அலைகள் பயங்கரமாக சீறிப் பாய்ந்தன.

    ராட்சத கடல் அலைகள் எழும்பி, தூண்டில் வளைவு மீது பயங்கரமாக மோதியது. இதன் காரணமாக தூண்டில் வளைவு உடைந்து சேதமடைந்தது. மேலும் கடல் நீர் அதிகமாக வெளியேறி, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.

    இதனால் அங்கு வசித்த வர்கள் பாதுகாப்பு காரண மாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சிலர் தங்கள் உறவினர் வீடு களுக்குச் சென்று தங்கினர். இதில் ஒரு சில வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அவற்றை பெண்கள் அப்பு றப்ப டுத்தினர். இதனால் ெகாட்டில் பாடு மீனவர் கிராமத்தில் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

    • கொட்டில்பாட்டில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடலரிப்பு
    • சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே கொட்டில்பாட்டில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட கடல் சீற்றத்தில் ராட்சத அலைகள் எழுந்து கடலரிப்பு தடுப்பு சுவரை தாண்டி விழுந்தது.

    இதில் ஆலயத்தின் அருகில் ஏற்பட்ட கடலரிப்பில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து விழுந்தது.அந்த பகுதியில் சுமார் 25 அடி ஆழத்திற்கு பள்ளம் விழுந்ததில் சாலையில் துண்டிப்பு ஏற்பட்டது.மேலும் கிழக்கு பகுதியில் 2 இடங்களில் அலை தடுப்பு சுவர் கற்கள் சரிந்து கடலில் விழுந்தது.

    தொடர்ந்து ஏற்படும் கடலரிப்பிலிருந்து வீடு களை பாதுகாக்க அங்கு தற்காலிகமாக மணல் மூடைகளை அடுக்க வேண்டும் என மீனவர் கள் வலியுறுத்தினர். இதை யடுத்து குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ் மணவாளக்குறிச்சி மணல் ஆலை நிறுவன அதிகாரிகளிடம் மணல் மூடைக்கு தேவையான மணல் வழங்குமாறு பேச்சு வார்த்தை நடத்தினார்.தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ. கொட்டில்பாட்டில் கடலரிப்பு ஏற்பட்ட பகுதி களை பார்வையிட்டார்.

    இதில் மணல் ஆலை நிறுவன கனிமம் பிரிவு முதன்மை மேலாளர் சிவராஜ், துணை பொது மேலாளர் ஜெயச்சந்திரன், பங்குத்தந்தை ராஜ், கவுன்சிலர் பனிக்குருசு, மாநில காங்.செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், குளச்சல் நகர தலைவர் சந்திரசேகர், முன்னாள் ராணுவ வீரர் சுதன் ஆகியோர் உடனிருந்தனர்.தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ.கடலரிப்பில் பாதிக்கப் பட்ட சிங்கார வேலர் காலனி பகுதியையும் பார்வையிட்டு சென்றார்.

    ×