search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொட்டாரம் பேரூராட்சி"

    • பேரூராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவு
    • இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில பேரூராட்சி பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை பொது இடத்தில் விடாமல் வீட்டுக்குள்ளேயே உறிஞ்சிக் குழாய் அமைத்துவிடவேண்டும் என்று பொதுமக்களை அரசு அறிவுறுத்தியது.

    இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இருப்பினும் அதை சில குறிப்பிட்ட பேரூராட்சி நிர்வாகம் நிறைவேற்றி வந்தது. அந்த அடிப்படையில் கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் வெளியேறும் குழாய் பேரூராட்சி சார்பில் அடைக்கப்பட்டது.

    இதற்கு அந்தப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதை த்தொடர்ந்து கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீகற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம், கொட்டாரம் கீழத்தெரு ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் ஐயப்பன் மற்றும் கொட்டாரம் வடக்கு தெரு ஸ்ரீ தேவி முத்தாரம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் பிச்சமுத்து ஆகியோர் தலைமையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அதன் பிறகும் தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை தொடர்ந்து அடைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதை கண்டித்து தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் கொட்டாரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி னார்கள். அதன்பிறகு கொட்டாரம் ராமநாதபுரம் ஸ்ரீ கற்பக விநாயகர் தேவஸ்தான தலைவர் சிவசுப்பிரமணியம் கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12-வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியாகும் கழிவுநீர் குழாயை அடைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கொட்டாரம் பேரூராட்சி பகுதியில் உள்ள 5-வது வார்டு முதல் 12- வது வார்டு வரை உள்ள பகுதிகளில் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியாகும் குழாயை அடைப்பதற்கு இடைக்காலதடை விதித்து உத்தரவு பிறப்பித்துஉள்ளது. இந்த உத்தரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×