search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைத்தூய்மை"

    • 1504 அங்கன்வாடி மையங்களிலும் கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டது.
    • குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி ஊராட்சி, முத்தால் நகர், மகாலிங்கம் தெரு அங்கன்வாடி மையத்தில் உலக கைத்தூய்மை தின நிகழ்ச்சி நடந்தது. இைதயொட்டி கைத்தூய்மையின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை கலெக்டர் மேகநாதரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    உலக கைத்தூய்மை தினமான இந்த நாளில், பல வகையில் கைகளை சுத்தமாக வைத்து கொள்ள விழிப்புணர்வைத் தந்து நலம் காப்பதே கைத்தூய்மை தினத்தின் நோக்கம் ஆகும். உலக அளவில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் சுகாதாரக் குறைபாடுகளினாலும், தன் சுத்த செயல்பாடுகளை முறையாக கடைப்பிடிக்காததாலும் சுமார் 1½ கோடி குழந்தைகள் இறக்கின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதனை அறிந்த உலக சுகாதார நிறுவனம் 2008-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15-ம் தேதியை ''உலக கைத்தூய்மை தினமாக'' அனுசரிக்க ஆணை பிறப்பித்தது. உணவை உண்ணும் முன்பு, கழிவறை சென்று வந்த பின்பு, வெளியே சென்று வீட்டுக்கு வந்து சிறு குழந்தைகளைத் தூக்கும் முன்பு, மூக்கை சீந்திய பின்பு, தும்மும் போது கைகளை பயன்படுத்திய பின்பு, குப்பைகளை அப்புறப்ப டுத்திய பின்பு, சமைக்கும் முன்பு, சாப்பாட்டை பரிமாறும் முன்பு, மாடி கைப்பிடி பிடித்த வந்த பின்பு, நோயாளிகள், அடிபட்டவர்களுக்கு சிகிச்சை செய்த பின்பு, வீட்டு உபயோகப் பொருட்களை சுத்தம் செய்த பின்பு, செல்லப் பிராணிகளை தொட்ட பின்பு, நூலகங்களில் புத்தகங்களை தேடி எடுத்த பின்பு, தலைக்கு எண்ணை தேய்த்து குழந்தைகளுக்கு தலை வாரிய பின்பு என பல வேலைகளைச் செய்த பிறகு கட்டாயம் கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

    அனைவரும் கைகளை தூய்மையுடன் பராமரித்து நல்ல வாழ்க்கையை பெறுவோம். விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் செயல்படும் 1504 அங்கன்வாடி மையங்களிலும் உலக கைத்தூய்மை தினம் அனுசரிக்கப்பட்டு, குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×