search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைதிக்கு"

    • ஆயுதப்படை ஏட்டு மணி என்பவர் உள்பட 4 பேர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • அப்போது, ஸ்டிராங் ரூமில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்கு, ஏட்டு மணி கஞ்சா மற்றும் செல்போனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    சேலம்:

    சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் சிகிச்சை பெறுவதற்காக ஸ்டிராங் ரூம் உள்ளது. இந்த அறையை சுற்றி துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி, ஆயுதப்படை ஏட்டு மணி என்பவர் உள்பட 4 பேர் நேற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஸ்டிராங் ரூமில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவருக்கு, ஏட்டு மணி கஞ்சா மற்றும் செல்போனை கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து அறிந்த உயர் அதிகாரிகள் விசா ரணை நடத்தினார். உடனடியாக மணி உட்பட 4 பேரையும் ஆயுதப்படைக்கு திரும்ப உத்தரவிட்டனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து துணை கமிஷனர் லாவண்யா 4 பேரிடமும் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ×