என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » கைதி கொலை
நீங்கள் தேடியது "கைதி கொலை"
திருவான்மியூரில் பழிக்குப் பழியாக ஜாமீனில் வந்த கைதி வெட்டி படுகொலை செய்யப்பட்டம் சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவான்மியூர்:
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது36). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவானி.
இவரை கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் கேலி-கிண்டல் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர் மதனை வெட்டிக் கொன்றார். இது தொடர்பாக தனசேகர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
மதன் கொலைக்கு பழி வாங்கும் வகையில் அவரது கூட்டாளிகள் தனசேகரை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். நேற்று மாலையில் தனசேகர் மோட்டார்சைக்கிளில் அடையாறில் இருந்து துரைப்பாக்கத்துக்கு சென்றார்.
திருவான்மியூர் அவ்வை நகர் கண்ணன் தெருவில் சென்றபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஆள் நடமாட்டம் இல்லை.
அப்போது முகத்தில் முகமூடி அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் தனசேகரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியன் ஜெயசீல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தனசேகர் கொலை தொடர்பாக பெருங்குடி கல்லுக்குட்டு பகுதியைச் சேர்ந்த கொலையாளி ஜெய்சங்கர் என்பவரை கைது செய்தார். முத்து என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை துரைப்பாக்கத்தை அடுத்த பெருங்குடி கல்லுக்குட்டு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர் (வயது36). கூலித் தொழிலாளி. இவரது மனைவி பவானி.
இவரை கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவர் கேலி-கிண்டல் செய்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர் மதனை வெட்டிக் கொன்றார். இது தொடர்பாக தனசேகர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
மதன் கொலைக்கு பழி வாங்கும் வகையில் அவரது கூட்டாளிகள் தனசேகரை கொல்ல தகுந்த சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். நேற்று மாலையில் தனசேகர் மோட்டார்சைக்கிளில் அடையாறில் இருந்து துரைப்பாக்கத்துக்கு சென்றார்.
திருவான்மியூர் அவ்வை நகர் கண்ணன் தெருவில் சென்றபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் ஆள் நடமாட்டம் இல்லை.
அப்போது முகத்தில் முகமூடி அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் தனசேகரை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக திருவான்மியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டியன் ஜெயசீல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தனசேகர் கொலை தொடர்பாக பெருங்குடி கல்லுக்குட்டு பகுதியைச் சேர்ந்த கொலையாளி ஜெய்சங்கர் என்பவரை கைது செய்தார். முத்து என்பவர் தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X