search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளியை வெட்டிய கும்பல் கைது"

    • முன்விரோதம் காரணமாக கூலித்தொழிலாளியை கும்பல் அரிவாளால் வெட்டியது.
    • போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கே. புதூரைச் சேர்ந்த நாசர் (32). இவர் தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கே. புதூர் வந்துள்ளார்.

    இவருக்கும் இதே ஊரைச் சேர்ந்த உபேஸ்ரகுமான் (30) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் நேற்று உபேஸ் ரகுமான், ரகிப் நிஸ்டர், சேக்பரீத், ரமீஷ்ராஜா, பாசித் ஆகியோர் நாசரை வழிமறித்து கத்தியால் வெட்டினர்.

    இதில் பலத்த காயமடைந்த நாசர் நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து கொடுத்த புகாரின்படி நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பால முத்தையா வழக்குப்பதிவு செய்து சேக்பரீத், ரமீஷ்ராஜா, பாசித், ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×