என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூலித்தொழிலாளி சாவு"
- எதிரே வந்த ஆட்டோ ஒன்று சங்கர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது.
- அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் பாலேபள்ளியைச் சேர்ந்தவர் வெங்கடப்பா. இவரது மகன் சங்கரப்பா என்கிற சங்கர் (வயது 28). கூலித்தொழிலாளியான இவர் அன்னியாம்-பாலேபள்ளி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது எதிரே வந்த ஆட்டோ ஒன்று சங்கர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் படுகாயம் அடைந்தார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து தளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.
- அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
ஈரோடு
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தை அடுத்துள்ள பெ.வெள்ளாளபாளையம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (40). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தாமோதரன் அவ்வப்போது கிடைக்கும் கூலி வேலைகளுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் தாமோதரனும் மற்றொரு நபரும் சுண்ணாம்பு அடிக்கும் வேலைக்கு சென்றனர்.
வேலை செய்து கொண்டிருந்தபோது தாமோதரனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு கீழே விழுந்து விட்டார்.
உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தாமோதரன் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து தாமோதரனின் தந்தை ராஜன் அளித்த புகாரின் பேரில் கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்