search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு வங்கிகள்"

    • திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
    • கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 2023-24-ம் ஆண்டில் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா்சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 182 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிா்க் கடன், கால்நடை பராமரிப்புக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில், உரிய தவணை தேதியில் பயிா் கடன்களை திருப்பி செலுத்தும் விவசாயிகள் வட்டியை செலுத்த தேவையில்லை. அதன்படி, 2023-24- ம் ஆண்டில் நவம்பா் 2-ந்தேதி வரை 21 ஆயிரத்து 395 விவசாயிகளுக்கு பயிா் கடனாக ரூ.243.09 கோடியம், கால்நடை பராமரிப்பு கடனாக 3 ஆயிரத்து 554 பேருக்கு ரூ.26.25 கோடியும் என மொத்தம் 24 ஆயிரத்து 949 விவசாயிகளுக்கு ரூ.269.34 கோடி வட்டியில்லாத பயிா் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அதேபோல 58 ஆயிரத்து 240 பேருக்கு நகை கடன்களாக ரூ.492 கோடியும், 375 பேருக்கு மத்திய கால கடன்களாக ரூ.3.78 கோடியும், 129 மாற்று திறனாளிகளுக்கு ரூ.84.95 லட்சமும் கடனாக வழங்கப்பட்டுள்ளது. டாப்செட்கோ மூலம் 377 பேருக்கு ரூ.2.72 கோடியும், டாம்கோ மூலம் 98 பேருக்கு ரூ.78 கோடியும், 848 சுய உதவி குழுக்களுக்கு ரூ.5.24 கோடியும், 155 பேருக்கு வீட்டு கடனாக ரூ.7.78 கோடியும், ஆயிரத்து 355 பேருக்கு சிறு கடன்களாக ரூ.4.44 கோடியும், 2 ஆயிரத்து 372 பேருக்கு இதர கடன்களாக ரூ.68.24 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 ஆயிரத்து 898 பேருக்கு ரூ.900.17 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2022-23 ம் ஆண்டை காட்டிலும் ரூ.244.46 கோடி அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    • கூகுள் பே, பே.டி.எம்., பி.எச்.ஐ.எம். உள்ளிட்ட அனைத்து பண மற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படுகிறது.

    சென்னை:

    கூட்டுறவு துறையில் கடந்த ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் 922 கிளைகள் அனைத்திலும் ஐ.எம்.பி.எஸ்.(உடனடி பணம் பரிமாற்றம்) கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு வாரங்களில் இவை அனைத்திலும் யு.பி.ஐ. வசதியும் கொண்டு வரப்படுகிறது.

    இதன்மூலம் கூகுள் பே, பே.டி.எம்., பி.எச்.ஐ.எம். உள்ளிட்ட அனைத்து பண மற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×