என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கூட்டுறவு வங்கி தலைவர்"
- விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன்.
- ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன். இவரை நேற்று அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த முரளி என்ற ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
கடந்த 35 ஆண்டுகளாக அதிமுக கட்சி பதவியில் வகித்து பல்வேறு கட்சி பணிகளை செய்து வந்தேன். எனது இளைய மகன் திருமணத்திற்கு புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதனால் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எந்தவித அறிவிப்பும் இன்றி என்னை நீக்கியுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம் நீங்கள்பாஜக கட்சியில் இணைந்துள்ளீர்களா? என நிருபர்கள் கேட்டபோது இதற்கு பதில் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்