search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூட்டுறவு வங்கி தலைவர்"

    • விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன்.
    • ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராகவும் விழுப்புரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளராகவும் பதவி வகித்தவர் முரளி என்ற ரகுராமன். இவரை நேற்று அ.தி.மு.க. வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி அ.தி.முக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து கடந்த 9 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த முரளி என்ற ரகுராமன் தனது பதிவியை ராஜினாமா செய்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    கடந்த 35 ஆண்டுகளாக அதிமுக கட்சி பதவியில் வகித்து பல்வேறு கட்சி பணிகளை செய்து வந்தேன். எனது இளைய மகன் திருமணத்திற்கு புதுவை மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் வந்து கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் திண்டிவனத்தில் ஸ்ரீராம் அறக்கட்டளை சார்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இதனால் அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து எந்தவித அறிவிப்பும் இன்றி என்னை நீக்கியுள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.அவரிடம் நீங்கள்பாஜக கட்சியில் இணைந்துள்ளீர்களா? என நிருபர்கள் கேட்டபோது இதற்கு பதில் கடவுளுக்கு மட்டுமே தெரியும் என்று கூறினார்.

    ×