search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் டெபாசிட்"

    • லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது
    • யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது

    திருப்பூர்:

    திருப்பூர் கோட்ட அளவிலான மின்நுகர்வோர் குறைகேட்பு கூட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுமதி தலைமை தாங்கினார். செயற் பொறியாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மின்நுகர்வோர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர். குறிப்பாக மின்வாரியம் லாபம் ஈட்டும் முயற்சியை கட்டுப்படுத்தி பொதுமக்களின் சிரமங்களை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டிடம் கட்டும் போது தற்காலிக மின் இணைப்பு வழங்குகிறது. ஒருமுனை இணைப்புக்கு 2,200 ரூபாய் டெபாசிட், மும்முனை இணைப்புக்கு 4,400 ரூபாய் டெபாசிட் செலுத்தி இணைப்பு பெற வேண்டும். யூனிட்டுக்கு 12 ரூபாய் கட்டணத்தில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி பயன்படுத்தினாலும் இல்லாவிட்டாலும் மாதம் 1,200 ரூபாய் வாடகை வசூலிக்கப்படுகிறது.

    தற்காலிக மின் இணைப்புக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கூடுதல் டெபாசிட் தொகை வழங்கப்படும். கடந்த சில நாட்களாக மாதா மாதம், கூடுதல் டெபாசிட் என்ற பெயரில், அதிக தொகை வசூலிப்பதாக மின்நுகர்வோர் அமைப்புகள் புகார் அளித்தன. மின்சார வாரியம் பல்வேறு வகையில் கட்டண உயர்வு செய்துள்ளது. இந்நிலையில் தற்காலிக இணைப்புகளுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடுதல் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுவது குறித்து முறையிடப்பட்டது. 

    ×