search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குவியல்கள்"

    • கால்நடைகள் துவசம் செய்து வருவதால் குப்பைகள் ரோட்டின் நடு பகுதிக்கு வந்து விடுகிறது.
    • குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மூக்கை பிடித்துக் கொண்டே பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட மலையப்ப கவுண்டர் லேஅவுட்டில் இருந்து காந்தி நகர் செல்லும் ரோட்டின் ஓரத்தில் மலை போல் குப்பைகள் குவிக்கப்பட்டு உள்ளது.

    அவற்றை கால்நடைகள் துவசம் செய்து வருவதால் குப்பைகள் ரோட்டின் நடு பகுதிக்கு வந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் தற்போது அடிக்கும் காற்றால் குப்பை மழையில் நனைந்து கொண்டே வாகனங்களை ஓட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் இந்த குப்பைகளால் துர்நாற்றம் ஏற்பட்டு மூக்கை பிடித்துக் கொண்டே பயணிகள் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே இவற்றை அப்புறப்படுத்தி குப்பைத் தொட்டி வைத்து குப்பைகளை அதில் போட்டு அப்புறப்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ×