search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழிதோண்டி புதைப்பு"

    • நாய் ஒன்று மானை துரத்தி கடித்து குதறியது.
    • வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் மானை குழி தோண்டி புதைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை முருகன் கோவில் வனப் பகுதி சுமார் 1700 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த வனப்பகுதியில் ஏராள மான மான்கள் வசித்து வருகிறது.

    தற்போது வறட்சி நிலவுவதால் இந்த மான்களுக்கு வனத்து றை சார்பில் ஆங்கா ங்கே தண்ணீர் தொட்டி கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மான்கள் அவ்வப்போது வனப்பகுதியில் இருந்து அருகில் உள்ள தோட்டங்களுக்கு தண்ணீ ரைத் தேடி சென்று வருகிறது.

    இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து சுமார் 5 வயதுடைய ஒரு ஆண் மான் தண்ணீர் தேடி அங்குள்ள தோட்டத்துக்கு சென்றுள்ளது.

    அப்போது அங்கு சுற்றி திரிந்த நாய் ஒன்று மானை துரத்தி கடித்து குதறியது. இதில் மான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் சென்னிமலை வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் சென்னிமலை கால்நடை மருத்துவர் சு.விஜயகுமார் இறந்த மானை பிரேத பரிசோதனை செய்தார்.

    அதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்குள்ள வனப்பகுதியில் மானை குழி தோண்டி புதைத்தனர்.

    ×