search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலசேகரநாத சுவாமி கோவில்"

    • குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கொடியேற்ற நாளில் காலை கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராட்டும், இரவு வள்ளி, தெய்வானையுடன் இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை 7 மணிக்கு தேவதா அனுஞ்ஞை, எஜமானர் அனுஞ்ஞை, மகா கணபதி பூஜை, புண்ணியாக வாசனம், பஞ்ச கவ்யபூஜை, வேதிகா அர்ச்சனை, கும்பூஜை, மகா கணபதி ஹோமம், மூலமந்திர ஹோமம், அஸ்திர ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களுடன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து விமானம் மற்றும் மூலஸ்தான கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தர்மஸம்வர்த்தினி அம்பாள், குலசேகரநாத சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பக்தி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை பத்தர்கள் குழுவினர் செய்திருந்தனர். 

    ×