search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
    X

    செங்கோட்டை குலசேகரநாத சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

    • குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் உள்ள குலசேகரநாத சுவாமி கோவிலில் சண்முகர் சன்னதியில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா தொடங்கி வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற உள்ளது. இதனையொட்டி கொடியேற்ற நாளில் காலை கணபதி ஹோமத்துடன் கொடியேற்றம் நடைபெற்றது. இதில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தை தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை, மாலை சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடை பெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து மாலை 5 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை ஆராட்டும், இரவு வள்ளி, தெய்வானையுடன் இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×