search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க"

    • போலீசார் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தினர்
    • தீபாவளி திருட்டு சம்பவங்களை தடுக்க நடவடிக்கை

    ஆரணி:

    ஆரணி காந்தி மார்க்கெட் பிரதான சாலையில் போக்குவ ரத்திற்கும், நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுருந்த கடைகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந் ரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன், போக்குவரத்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார் அகற்றினர்.

    மேலும் நடைபாதைகளை ஒழுங்குபடுத்தினர். வருகிற தீபாவளி பண்டிகையை அமைதியாகவும், சிறப்பாகவும் மக்கள், வியாபாரிகள் கொண்டாட குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் பாதுகாப்பாகவும் இருக்க சாலையை சீரமைப்பதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    ×