search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரு பூர்ணிமா விழா"

    • மாலையில் 6:00 மணிக்கு ஸ்ரீ சத்யதர்ம சாய்பாபா ரத ஊர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது
    • கன்னியாகுமரி மாவட்ட சீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள். பக்தர்கள் செய்துள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் வடிவீஸ்வரம் சாய்பாபா நகரில் உள்ள ஸ்ரீ சத்தியதர்ம சாய்பாபா கோவில் குரு பூர்ணிமா விழா இன்றும் நாளையும். நடைபெறுகிறது. இன்று காலை கணபதி ஹோமம் அதைத்தொடர்ந்து ஆரத்தி எடுக்கப்பட்டு அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து மாலையில் 6:00 மணிக்கு ஸ்ரீ சத்யதர்ம சாய்பாபா ரத ஊர்வலம் புறப்படுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு இரவு ஆரத்தி நடத்தப்பட்டு அருட்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    நாளை திங்கட்கிழமை காலை 7 மணிக்கு மங்கள இசை உடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. காலை 9 மணிக்கு சாய்சதீசரிதம் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ சத்ய தர்ம சாய்பாபாவிற்கு அபிஷேகமும் அலங்காரத்துடன் கூடிய ஆரத்தியும் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு சொற்பொழிவு இரவு 7 மணிக்கு பக்தர்கள் மூலம் பாபாவிற்கு புஷ்பா அபிஷேகமும் இரவு 8 மணிக்கு ஆரத்தி நடத்தப்பட்டு அருட்பிரசாதமும் வழங்கப்படுகிறது.

    விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட சீரடி சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள். பக்தர்கள் செய்துள்ளனர்.

    ×