search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டு குழிகள்"

    • பொதுமக்கள் கோரிக்கை
    • மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    கருங்கல்:

    கருங்கல் பேரூ ராட்சிக்குட்பட்டது தெரு வுக்கடை. இங்குள்ள பொட்டக்குழி சாலையில் தெருவுக்கடையில் இருந்து சாலை மிகவும் மோசமாக உள்ளது. சி.எஸ்.ஐ. சர்ச் வரை சாலை குண்டும் குழிகளும் நிறைந்து உள்ளது. இதனால் அந்த வழியே செல்பவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுமட்டுமல்லாது மழை காலங்களில் குண்டு குழிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் பொது மக்கள் நடந்து செல்ல முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். பல வருடங்களாகவே இச் சாலையில் மக்கள் நடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    இதனை சீரமைக்க வலி யுறுத்தி பேரூராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நட வடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. ஆகவே போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுத்து இந்த சாலையை சீர்செய்திட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×